புழல் சிறையில் கைதிகளிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல்

புழல் சிறையில் கைதிகளிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல்
புழல் சிறையில் கைதிகளிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல்

திருவள்ளூர் மாவட்டம் புழல் சிறையில் விசாரணை கைதிகளிடமிருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

புழல் சிறையில் தங்கியிருக்கும் விசாரணை கைதிகளிடம் செல்ஃபோன், சிம்கார்டுகள் உள்ளிட்ட பொருட்கள் இருப்பதாக சிறப்பு குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலையடுத்து சிறைத்துறை அதிகாரிகள் திடீரென்று விசாரணை கைதிகள் தங்கிருந்த அறையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, செல்போன்கள், 2 சிம்கார்டுகள், 2 சார்ஜர்கள் மற்றும் பேட்டரிகளும் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, செல்போன்களை பதுக்கி வைத்திருந்த கைதிகளிடம் சிறைத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 

சிறையில் உள்ள பிற அதிகாரிகள் செல்போன்கள் பயன்படுத்த கைதிகளுக்கு உதவி இருந்தால் அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினர்.சிறைக் கைதிகள் செல்போன் பயன்படுத்துவதை தடுக்க ஜாமர் கருவிகளை பொருத்தும் பணி நடைபெற்று வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com