5ஆம் வகுப்பு மாணவியை உதைத்து காயப்படுத்திய மற்றொரு மாணவியின் தாய்மீது வழக்குப்பதிவு

5ஆம் வகுப்பு மாணவியை உதைத்து காயப்படுத்திய மற்றொரு மாணவியின் தாய்மீது வழக்குப்பதிவு

5ஆம் வகுப்பு மாணவியை உதைத்து காயப்படுத்திய மற்றொரு மாணவியின் தாய்மீது வழக்குப்பதிவு

காஞ்சிபுரம் அருகே அரசு பள்ளி வகுப்பறையில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியை அடித்து உதைத்த மற்றொரு சிறுமியின் தாய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேடல் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகளுக்கு இடையே சிறு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனை, ஒரு மாணவி தன் தாய் மேகலாவிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மேகலா மாலை பள்ளி வகுப்பிற்கு வந்து சம்மந்தப்பட்ட சிறுமியை உதைத்து காயப்படுத்தியுள்ளார்.

தலைமை ஆசிரியர் எடுத்துக்கூறியும் கேட்காமல் அந்த சிறுமியை தாக்கியுள்ளார். உடல்நிலை மோசமானதால் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது தாய், மேகலா மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார். சிறுமியை கண்மூடித்தனமாக தாக்கிய மேகலா மீது காவல்துறையினர் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com