சென்னை: குடிபோதையில் தாறுமாறாக காரை ஓட்டிய தொழிலதிபர் கைது

சென்னை: குடிபோதையில் தாறுமாறாக காரை ஓட்டிய தொழிலதிபர் கைது
சென்னை:  குடிபோதையில் தாறுமாறாக காரை ஓட்டிய தொழிலதிபர் கைது

சென்னை அடையாறு பகுதியில் மதுபோதையில் சொகுசு காரை அதிவேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தொழிலதிபரை கைது செய்த காவல்துறையினர், பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.

சர்தார் படேல் சாலையில் அதிவேகமாக சொகுசு கார் ஒன்று சென்றுள்ளது. அப்போது போக்குவரத்து உதவி ஆய்வாளர், காரை நிறுத்த முயற்சித்தும் நிற்காமல் சென்றதால், காரை துரத்திச் சென்றுள்ளார். அப்போது, மத்திய கைலாஷ் பகுதியில், சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்புகள் மீது மோதி கார் நின்றுள்ளது.

பின்னர் காவல்துறையினர் காரை சோதனை செய்து பார்த்த போது, துரைப்பாக்கத்தைச் சேர்ந்த ஹரீஷ் டி ஜோத்வானி என்ற தொழிலதிபர் மதுபோதையில் காரை ஓட்டியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் பின்னர், ஜாமீனில் விடுவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com