“கொலைமிரட்டல் விடுக்கிறார்கள்” : முன்னாள் எம்.எல்.ஏ மீது கோவை பெண் தொழிலதிபர் புகார்

“கொலைமிரட்டல் விடுக்கிறார்கள்” : முன்னாள் எம்.எல்.ஏ மீது கோவை பெண் தொழிலதிபர் புகார்
“கொலைமிரட்டல் விடுக்கிறார்கள்” : முன்னாள் எம்.எல்.ஏ மீது கோவை பெண் தொழிலதிபர் புகார்

திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதோடு அடியாட்களை வைத்து மிரட்டுவதாக முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கம், அவரது மருமகன் மீது பெண் தொழில் அதிபர் ஒருவர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் சிந்துஜா(34). தொழிலதிபரான இவர் முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கம், அவரது மருமகனான அருண் பிரகாஷ் உட்பட 5 நபர்கள் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து சிந்துஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், "கோவை நவஇந்தியா அருகே சாக்லேட் ஃபேக்டரி வைத்து நடத்தி வருகிறேன். கடந்த 2014 ஆம் ஆண்டு பி.எஸ்.ஜி நிறுவன உரிமையாளருடன் எனக்கு திருமணம் நடந்து விவாகரத்து ஆகியுள்ளது.

முன்னாள் கணவரின் அலுவலகத்தில் பணிபுரிந்த அருண் பிரகாஷ் என்பவர் திருமணம் செய்து கொள்வதாக கூறி என்னுடன் பழகினார். அதன்பிறகு தனியாக குடும்பம் நடத்திவரும் எங்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அருண் பிரகாஷை நம்பி அவருக்கு சுமார் 7 கோடி ரூபாய் வரை செலவு செய்தேன். 3 கார்களை எனது பெயரில் லோன் போட்டு வாங்கி கொடுத்தேன்.

ஒன்றாக இருந்தாலும் அருண்பிரகாஷ் திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்ததால் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கத்தின் மருமகன் எனக்கூறி என்னை மிரட்டியதுடன், வெளியே சொன்னால் எனது ஆபாச படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டு விடுவதாகவும் அருண் பிரகாஷ் மிரட்டினார். மேலும் கோவை தங்கம், அவரது மகள், அருண் பிரகாஷ் ஆகியோர் அடியாட்களுடன் வந்து என்னையும் எனது குடும்பத்தினரையும் தாக்கினர். இது குறித்து புலியகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது அருண் பிரகாஷை வரவழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் தான் செய்ததை ஒப்புகொண்டார். மேலும் எனது 1.5 கோடி ரூபாயை ஒரு வருடத்தில் தருவதாகவும் அவர் ஒப்புகொண்டார்.

இதனையடுத்து அடுத்த நாளே கோவை தங்கம் தனது அடியாட்களுடன் வந்து வழக்கை வாபஸ் வாங்குமாறும் இல்லையென்றால் கொலை செய்துவிடுவதாக மீண்டும் மிரட்டி சென்றனர். இது தொடர்பாக சிசிடிவி காட்சியை காவல்துறையிடம் கொடுத்துள்ளேன். இதனால் கொலை செய்துவிடுவதாக மிரட்டிய கோவை தங்கம், அருண் பிரகாஷ், உட்பட 5 நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனக்கு பாதுகாப்பு அளிக்ககோரி டிஜிபியிடம் புகார் அளித்துள்ளேன்" என்று சிந்துஜா கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com