திடீரென வெடித்த குண்டுகள்... இருவர் காயம்.. திருப்போரூரில் நடந்தது என்ன?

திடீரென வெடித்த குண்டுகள்... இருவர் காயம்.. திருப்போரூரில் நடந்தது என்ன?
திடீரென வெடித்த குண்டுகள்... இருவர் காயம்.. திருப்போரூரில் நடந்தது என்ன?

திருப்போரூர் பேருந்து நிலையம் எதிரே கடந்த 28 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வெடிகுண்டு கொண்டு செல்லும்போது வெடித்ததில் 2 ரவுடிகள் படுகாயம். இருவரையும் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுராந்தகம் சிறையில் அடைத்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேருந்து நிலையம் எதிரில் இரவு சுமார் ஒன்பது முப்பதுமணி அளவில் இருசக்கர வாகனத்தில் வெடிகுண்டு சென்றபோது வெடிகுண்டு தவறுதலாக பயங்கர சத்தத்துடன் வெடித்தில் அசோக் மற்றும் விக்கி என்ற விவேக் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை மீட்ட திருப்போரூர் போலீசார் செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதித்து பின்னர் கைது செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் அசோக் கேளம்பாக்கம் ஜோதிநகர் பகுதியில் வீடு எடுத்து தங்கி இருந்தது தெரிய வந்தது. அந்த வீட்டில் இருந்து நேற்று 3 கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டன.

மேலும் பட்டாக்கத்தி ஒன்றும் அவனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அசோக் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் அவரை செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்பு மதுராந்தகம் சிறையில் அடைத்தனர்.

மேலும் விக்கி என்ற விவேக் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான் இவர்களுடைய நண்பர்கள் 3 பேரை கைது செய்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com