திருப்பூர் சூட்கேஸில் இருந்த பெண்ணின் சடலம் அடையாளம் தெரிந்தது

திருப்பூர் சூட்கேஸில் இருந்த பெண்ணின் சடலம் அடையாளம் தெரிந்தது
திருப்பூர் சூட்கேஸில் இருந்த பெண்ணின் சடலம்  அடையாளம் தெரிந்தது

திருப்பூரில் சூட்கேசில் இருந்து சடலமாக பெண் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருப்பூர், தாராபுரம் சாலையில் கடந்த 7 ஆம் தேதி கேட்பாரற்று கிடந்த சூட்கேஸை கைப்பற்றிய காவல்துறையினர் அதை திறந்து பார்த்தபோது ஒரு பெண்ணின் சடலம் அடைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த கொலை தொடர்பாக விசாரிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் ஆராய்ந்தனர். அதில், சூட்கேஸை இருவர் கொண்டு வந்தது தெரியவந்தது. அடுத்த அந்த பெண் வசித்து வந்த வீடு பற்றி தகவல் கிடைத்த நிலையில், அங்கு சென்று விசாரணை மேற்கொண்டதில், அவர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என தெரியவந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் தான் அந்த பெண் திருப்பூர் வந்து வாடகை வீட்டில் குடியிருந்தார் என்றும், அவருடன் தங்கியிருந்த நபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டை காலி செய்வதாக கூறி பொருட்களை எடுத்துச் சென்றதாகவும் வீட்டு உரிமையாளரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. அப்போது அந்த நபர் பெரிய சூட்கேஸ் எடுத்துச் சென்றதும் தெரியவந்துள்ளது. இந்த கொலையில் அந்த பெண்ணுடன் தங்கியிருந்த நபருடன், வேறொருவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும், இருவரும் வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com