கோவை: மூத்த தலைவர்கள் மீது அவதூறு - பாஜக பெண் தொண்டர் கைது!

கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் சிறந்த செயல்பாட்டாளர் என்ற விருது பெற்ற பாஜக தொண்டர் அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டார்.
அண்ணாமலையுடன் பாஜக பெண் தொண்டர்
அண்ணாமலையுடன் பாஜக பெண் தொண்டர்pt desk

கோவையில் தந்தை பெரியார் கழகம் உள்ளிட்டோரை விமர்சித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்ட பாஜக பெண் நிர்வாகியொருவர் சிட்டி சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் சிறந்த செயல்பாட்டாளர் விருது பெற்ற உமா கார்க்கி என்ற பெண் அவதூறு வழக்கில் கைதாகியுள்ளார்.

arrested
arrestedpt desk

இவர் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பெரியார் மற்றும் மணியம்மை உறவுமுறையை கொச்சைப் படுத்தியும், கருணாநிதி, முக.ஸ்டாலின் உள்ளிட்டோரின் செயல்பாடுகளை விமர்சித்தும் பதிவிட்டு இருந்தார்.

இந்துக்களை பிரதானப்படுத்தி, பிற மதத்தினரை மோசமாக சித்தரித்து இவர் போட்ட பதிவுகளும் இவர் மீதான வழக்குக்கு வலு சேர்த்து இருக்கின்றன. கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் உமா கார்க்கி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் திமுக தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் ஹரிஷ் என்பவர் கொடுத்த புகார் அடிப்படையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com