’பாஜக பிரமுகர் திருமணம் செய்ய கட்டாயப்படுத்துகிறார்’- தற்கொலைக்கு முயன்ற கணவனை இழந்த பெண்!

’பாஜக பிரமுகர் திருமணம் செய்ய கட்டாயப்படுத்துகிறார்’- தற்கொலைக்கு முயன்ற கணவனை இழந்த பெண்!
’பாஜக பிரமுகர் திருமணம் செய்ய கட்டாயப்படுத்துகிறார்’- தற்கொலைக்கு முயன்ற கணவனை இழந்த பெண்!

திண்டுக்கல்லில் கணவரை இழந்த இளம்பெண் தன்னை பாஜக பிரமுகர் கட்டாய திருமணம் செய்ய மிரட்டல் விடுத்ததாக கூறி விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் குடை பாறைப்பட்டி, பெரியாண்டவர் நகரைச் சேர்ந்தவர் மனிஷா (25). சட்டம் பயின்றவர். இவரது கணவர் குமரேசன். இவருக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளார். கணவர் குமரேசன் கடந்த 2018இல் படுகொலை செய்யப்பட்டார். மனிஷா தனது தாய் மற்றும் தங்கை ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சோலைஹால் பகுதியைச் சேர்ந்த பாஜக இளைஞரணி மாவட்ட செயலாளர் தினேஷ் குமார், தான் குமரேசனின் சகோதரர் எனக்கூறி அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். மேலும் தன்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளுமாறு மனிஷாவை தொடர்ந்து கடந்த இரண்டு வருடமாக தொந்தரவு செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தனது கட்சி பலத்தை பயன்படுத்தி காவல்நிலையத்தில் அந்த குடும்பத்தினர் மீது பொய் புகார் அளித்து மிரட்டல் விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மனிஷா வீட்டில் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். வீட்டில் மயங்கிக்கிடந்த மனிஷாவை மீட்டு உறவினர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தற்பொழுது மனிஷா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு அளிக்கப்பட்டு வருகிறது. கட்டாய திருமணம் மற்றும் தங்கள் மீது பொய் புகார் கொடுத்து மிரட்டல் விடுத்துவரும் நபர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மனிஷாவின் சகோதரி சீமாதேவி கோரிக்கை வைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com