கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கு: பிஷப் பிராங்கோவுக்கு ஜாமீன்

கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கு: பிஷப் பிராங்கோவுக்கு ஜாமீன்
கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கு: பிஷப் பிராங்கோவுக்கு ஜாமீன்

கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரதான குற்றவாளியாக இருக்கும் பிஷப் பிராங்கோ முலாக்கலுக்கு  கோட்டயம் கூடுதல் அமர்வு  நீதிமன்றம்  ஜாமீன்  வழங்கியது.  

இவ்வழக்கின் அனைத்து விசாரணைகளுக்கும் ஆஜராகத் தவறியதற்காக ஜூலை மாதம் விசாரணை  நீதிமன்றம் அவரது  ஜாமீனை  ரத்து  செய்தது. மேலும்  புதிய ஜாமீன் மனுவின் மீதான விசாரணையில் இப்போது நீதிமன்றம் இவருக்கு  ஜாமீன்  வழங்கியுள்ளது. அடுத்தகட்ட  விசாரணையை  ஆகஸ்ட் 13 ஆம்  தேதிக்கு ஒத்திவைத்துள்ளதுடன், அப்போது குற்றப்பத்திரிகை வாசிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். அவரது  புதிய ஜாமீன் நிபந்தனைகளின் படி  ஆகஸ்ட் 13 வரை, பிஷப் பிராங்கோ கேரளாவை விட்டு வெளியேறக்கூடாது, மேலும் அடுத்தடுத்த அனைத்து விசாரணைகளுக்கும்  அவர் நேரடியாக ஆஜராக  வேண்டும் என்றும், முன்னர் வழங்கப்பட்ட ஜாமீன் அல்லாத வாரண்டையும் நீதிபதி நினைவு கூர்ந்தார்

ஜலந்தர் மறைமாவட்டத்தைச் சேர்ந்த பிஷப் பிராங்கோ  2014 மற்றும் 2016 ஆம் ஆண்டுக்கு  இடையில்  கோட்டையத்திலுள்ள  குருவிலங்காட்டில்  மிஷனரிஸ் ஆஃப் ஜீசஸ்  கான்வென்ட்டில் இருந்த  44 வயது கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் அவர்  2018 ஆம் ஆண்டு  செப்டம்பர் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர்  2018 அக்டோபரில்  அவருக்கு  ஜாமீன்  வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com