‘மகனின் ஆதாரங்களை அழித்த வழக்கு’- நாகர்கோவில் காசியின் தந்தைக்கு நிபந்தனை ஜாமீன்

‘மகனின் ஆதாரங்களை அழித்த வழக்கு’- நாகர்கோவில் காசியின் தந்தைக்கு நிபந்தனை ஜாமீன்

‘மகனின் ஆதாரங்களை அழித்த வழக்கு’- நாகர்கோவில் காசியின் தந்தைக்கு நிபந்தனை ஜாமீன்
Published on

பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நாகர்கோவில் காசியின் அப்பா தங்கபாண்டி ஜாமீன் கோரிய வழக்கில் நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி பணமோசடி மற்றும் பாலியல் தொல்லை கொடுத்து ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டிய வழக்கில் நாகர்கோவிலை சேர்ந்த சுஜி என்ற காசி, கடந்த 2020-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்த ஆதாரங்களை அழித்ததாக அவரது அப்பா தங்க பாண்டியன் மேல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டுமெனக்கோரி தங்கபாண்டி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி,"தங்கபாண்டியன் சாட்சியங்களை மிரட்டக் கூடாது, சாட்சிகளை கலைக்கும் நோக்கில் செயல்படக் கூடாது மற்றும் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்” என்ற நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

மேலும் நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் காவல்துறையினர் உரிய நடவடிக்கைகள் எடுக்கலாம் எனவும் உத்தரவிட்டார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com