மதுரை: அரசு சான்றிதழ்கள் பெற லஞ்சம்; தனியார் இ-சேவை மையத்திற்கு சீல்

மதுரை: அரசு சான்றிதழ்கள் பெற லஞ்சம்; தனியார் இ-சேவை மையத்திற்கு சீல்
மதுரை: அரசு சான்றிதழ்கள் பெற லஞ்சம்; தனியார் இ-சேவை மையத்திற்கு சீல்
மதுரையில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட அரசு சம்பந்தப்பட்ட ஆவணங்களை வழங்க ஆயிரக்கணக்கில் லஞ்சம் பெற்ற தனியார் இ-சேவை மையத்திற்கு வருவாய்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த சாய்ராம் என்பவர் சார்பதிவாளர் அலுவலகம் முன்பாக செயல்பட்டு வந்த தனியார் இ - சேவை மையத்தில் வாரிசு சான்றிதழ்கோரி ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தார். அதற்கு 3,500 ரூபாய் செலுத்த வேண்டும் என ஊழியர்கள் கோரிய நிலையில் சாய்ராம் நேரில் சென்று முறையிட்டுள்ளார்.
சான்றிதழ் பெற அரசு அதிகாரிகளுக்கு பணம் வழங்க வேண்டும் என சேவை மைய ஊழியர் கூறியுள்ளார். இதனை வீடியோவாக பதிவு செய்த சாய்ராம் சமூகவலைதளங்களில் புகாராக பதிவிட்டார். இதையடுத்து விசாரணை மேற்கொண்ட வருவாய்த்துறை அதிகாரிகள், அனுமதியை தவறாக பயன்படுத்திய தனியார் இ- சேவை மையத்திற்கு சீல் வைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com