சான்றிதழ் பெற அரசு அதிகாரிகளுக்கு பணம் வழங்க வேண்டும் என சேவை மைய ஊழியர் கூறியுள்ளார். இதனை வீடியோவாக பதிவு செய்த சாய்ராம் சமூகவலைதளங்களில் புகாராக பதிவிட்டார். இதையடுத்து விசாரணை மேற்கொண்ட வருவாய்த்துறை அதிகாரிகள், அனுமதியை தவறாக பயன்படுத்திய தனியார் இ- சேவை மையத்திற்கு சீல் வைத்தனர்.