‘ஏடிஎம் கார்டை கொடுங்கள் பணம் எடுத்து தருகிறேன்’: முதியவரை ஏமாற்றி ரூ.1.13 லட்சம் திருட்டு

‘ஏடிஎம் கார்டை கொடுங்கள் பணம் எடுத்து தருகிறேன்’: முதியவரை ஏமாற்றி ரூ.1.13 லட்சம் திருட்டு
‘ஏடிஎம் கார்டை கொடுங்கள் பணம் எடுத்து தருகிறேன்’: முதியவரை ஏமாற்றி ரூ.1.13 லட்சம் திருட்டு

சென்னையில் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வந்த முதியவரை ஏமாற்றி ரூ.1.13 லட்சம் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை திருவல்லிக்கேணி அயோத்தியா நகரைச் சேர்ந்தவர் முதியவர் ராஜேந்திரன் (62). இவர் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் உதவியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். கடந்த 10ஆம் தேதி திருவல்லிக்கேணி துளசிங்கபெருமாள் கோயில் தெருவில் உள்ள ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையத்திற்கு சென்ற இவர், தனது கனரா வங்கி ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்றார்.

 அப்போது, ராஜேந்திரனுக்கு பின்னால் நின்றுகொண்டிருந்த சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர், பணம் எடுத்து கொடுக்க உதவி செய்வதாக கூறியுள்ளார். பணம் எடுத்த பின்னர் தான் வைத்திருந்த போலி ஏடிஎம் கார்டை ராஜேந்திரனிடம் மாற்றி கொடுத்து விட்டு அந்த நபர் சென்றுவிட்டார். விபரம் அறியாமல் முதியவர் ராஜேந்திரன் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக வந்த குறுச்செய்தியை கண்டு ராஜேந்திரன் அதிர்ச்சியடைந்தார்.

நான்கு நாட்களில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.1.13 லட்சம் எடுக்கப்பட்டிருந்தது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ராஜேந்திரன், உடனே ஐஸ்ஹவுஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ராஜேந்திரன் பணம் எடுத்த ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், நூதன திருடனை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com