மகளுக்கு பாலியல் வன்கொடுமை! கண்டித்த மனைவியை கழுத்தறுத்து கொன்ற கொடூர கணவன்!

மகளுக்கு பாலியல் வன்கொடுமை! கண்டித்த மனைவியை கழுத்தறுத்து கொன்ற கொடூர கணவன்!

மகளுக்கு பாலியல் வன்கொடுமை! கண்டித்த மனைவியை கழுத்தறுத்து கொன்ற கொடூர கணவன்!
Published on

பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த அசாம் மாநிலம் திப்ருகரை சேர்ந்த ஒருவர், தனக்கெதிராக போலீஸில் புகாரளித்த தனது மனைவியையும் அம்மாநில நீதிமன்ற வளாகத்திலேயே வைத்து கழுத்தறுத்து கொலை செய்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், தனது கணவர் பெற்ற மகளையே கற்பழித்த குற்றத்திற்காக கடந்தாண்டு செப்டம்பர் மாதம் அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் அந்த நபர் கைது செய்யப்பட்டு திப்ருகர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 9 மாதங்களுக்கு மேல் சிறையில் இருந்த அவர், இம்மாதம் 6ஆம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார் என்று கூறினார்.

மேலும், சம்பவத்தன்று தங்களது மகளோடு தந்தையும் தாயும் நீதிமன்ற வளாகத்தில் இருந்தனர். அப்போது திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தனது மனைவியின் கழுத்தை அறுத்தார். நிகழ்விடத்திலேயே நிலைகுலைந்து விழுந்த அவரது மனைவி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே, சம்பவம் நடந்த இடத்தில் இருந்து தப்ப முயன்ற பெண்ணின் கணவரை அங்கிருந்த வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற வளாக பாதுகாப்பு ஊழியர்கள் மடக்கிப் பிடித்தனர். பின்னர், அவர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் மேலும் ஒரு வழக்கு பதியப்பட்டது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com