“என்மீது வீண்பழி” - ஆர்யன் கான் ஜாமீன் மனு புதன்கிழமைக்கு ஒத்திவைப்பு

“என்மீது வீண்பழி” - ஆர்யன் கான் ஜாமீன் மனு புதன்கிழமைக்கு ஒத்திவைப்பு
“என்மீது வீண்பழி” - ஆர்யன் கான் ஜாமீன் மனு புதன்கிழமைக்கு ஒத்திவைப்பு

போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானின் ஜாமீன் மனு புதன்கிழமை விசாரணைக்கு வரவுள்ளதாக மும்பை சிறப்பு நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் ஆர்யன் கான் கைதுசெய்யப்பட்டு சிறையில் உள்ளார். ஆர்யன் கானின் ஜாமீன் மனு ஏற்கெனவே கீழமை நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மீதான விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் அதிகாரிகள் தன்னை வேண்டுமென்றே தொடர்புபடுத்தி இருப்பதாகவும், எனவே தனது ஜாமீன் மனுவை உடனடியாக விசாரித்து தனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்றும் ஆர்யன் கான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதே நேரத்தில் இந்த வழக்கு தற்போது சரியான சென்று கொண்டிருப்பதால் கூடுதல் ஆவணங்கள் இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட இருப்பதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை மும்பை சிறப்பு நீதிமன்றம் வரும் புதன்கிழமைக்கு ஒத்திவைத்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com