அரியலூர்: மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக பெண் உட்பட இருவர் கைது

அரியலூர்: மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக பெண் உட்பட இருவர் கைது
அரியலூர்: மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக பெண் உட்பட இருவர் கைது

அரியலூர் அருகே மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் அரசின் அனுமதியின்றி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவல்படி போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது உடையார்பாளையம் அருகே உள்ள வடகடல் பகுதியைச் சேர்ந்த கலைவாணி, ஆதிச்சனூர் பகுதியைச் சேர்ந்த ராமதாஸ் ஆகியோர் அரசு அனுமதியின்றி வீட்டின் பின்புறம் மதுபானங்களை பதுக்கி வைத்து கள்ளத்தனமாக விற்பனை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்கள் வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் பொட்டகொள்ளை பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த அன்புமணி என்பவரை பிடிக்க முயன்றபோது தப்பியோடிய நிலையில் இவர்களிடம் இருந்து 1826 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அன்புமணியை உடையார்பாளையம் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com