அரியலூர்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை; அரசு ஊழியர் போக்சோவில் கைது

அரியலூர்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை; அரசு ஊழியர் போக்சோவில் கைது
அரியலூர்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை; அரசு ஊழியர் போக்சோவில் கைது

ஆண்டிமடம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வருவாய் கோட்டாட்சியர் அலுவலக ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள ராங்கியம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கட்ரமணன். இவர் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இவர், அதே பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் காதலிப்பதாகக்கூறியும், தன்னை காதலிக்க வேண்டி வற்புறுத்தியுள்ளார். இதையடுத்து பரிசுப் பொருட்கள் வைத்திருப்பதாக அந்த மாணவியிடம் கூறி தன்னுடன் வருமாறு வற்புறுத்தியுள்ளார்.

இதைத்தொடர்ந்து மாணவி வர மறுத்து எதிர்ப்பு தெரிவித்துவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். அவரை விடாமல் துரத்திச் சென்ற அவர், வீட்டருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் சுமதி வழக்குப்பதிவு செய்து சம்பவ இடம் சென்று விசாரணை செய்தார். பின்னர் வெங்கட்ரமணன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com