அரியலூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 3 சிறுவர்கள் மீது போக்சோ வழக்கு

அரியலூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 3 சிறுவர்கள் மீது போக்சோ வழக்கு
அரியலூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 3 சிறுவர்கள் மீது போக்சோ வழக்கு

அரியலூரில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 7 மற்றும் 9 வயது சிறுவர்கள் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள பாக்கியநாதபுரம் கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமிக்கு அப்பகுதியை சேர்ந்த 7 மற்றும் 9 வயது சிறுவர்கள் மூன்றுபேர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

பாலியல் தொல்லைக்கு ஆளான சிறுமியை தற்போது சிகிச்சைக்காக லால்குடி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

இதையடுத்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரை அடுத்து 7 மற்றும் 9 வயதான, 3 சிறுவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் அரியலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com