அரியலூர்: 17 வயது சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

அரியலூர்: 17 வயது சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
அரியலூர்: 17 வயது சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே 17 வயது சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மணிவேல் என்பவரது மகன் பாலகிருஷ்ணன் (26). இவர் அப்பகுதியில் (ஹாலோ பிளாக்) சிமெண்ட் செங்கல் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இவருக்கு, உடையார்பாளையம் பகுதியில் உள்ள கடை ஒன்றில் பணியாற்றி வந்த 17- வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த சிறுமியிடம் நயவஞ்சகமாக பேசி, ஏமாற்றி அவருடன் நெருங்கிப் பழகியதில், தற்போது அந்த சிறுமி 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதனையடுத்து அவரை விட்டு, இளைஞர் தலைமறைவானார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் திருமதி. மீராபாயிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில், 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கி தலைமறைவான வாலிபர் பாலகிருஷ்ணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அரியலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

பாதிக்கப்பட்ட மூன்று மாத கர்ப்பிணி சிறுமியை, அரியலூர் மாவட்ட சமூக நல அலுவலர் கார்த்திகேயன் மூலம் பெண் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com