ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் சிக்கிய 80 கிலோ கஞ்சா - இளைஞர் கைது

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் சிக்கிய 80 கிலோ கஞ்சா - இளைஞர் கைது
ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் சிக்கிய 80 கிலோ கஞ்சா - இளைஞர் கைது

ஜெயங்கொண்டம் அருகே சந்தேகப்படும்படியாக இருந்த இளைஞரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 80 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர், அப்போது ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த நபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர், அமிர்தராயன் கோட்டை காசிராஜன் என்பதும், தஞ்சாவூரில் இருந்து கொண்டு வந்த 80 கிலோ கஞ்சா பொட்டலகங்களை விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் கஞ்சா பொட்டலத்தையும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து காசிராஜனை கைது விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com