அரக்கோணம்: இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் கொலை

அரக்கோணம்: இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் கொலை
அரக்கோணம்: இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் கொலை

அரக்கோணம் அருகே முன்விரோதம் காரணமாக இரு பிரிவினருக்கு ஏற்பட்ட மோதலில் 2 பேர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சோகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அர்சுனன் (23) மற்றும் திருமணமாகி 10 நாட்களே ஆன புதுமாப்பிளை சூர்யா (21 ), மதன்(16) மற்றும் வல்லரசு(21) ஆகியோர் சேர்ந்து நேற்று மாலை 6 மணியளவில், ஊருக்கு அருகில் உள்ள குருவராஜப்பேட்டை பஜார் வீதியில் நின்று நின்றுகொண்டிருந்தனர். அப்போது இவர்களுக்கும் பக்கத்து ஊரான பெருமாள்ராஜப்பேட்டையைச் சேர்ந்த மாற்று சமுதாயத்தைச் சார்ந்த 5 பேர் கொண்ட கும்பல் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து நேற்று இரவு 8 மணியளவில் பெருமாள்ராஜபேட்டை பேருந்து நிலையம் அருகே இவர்கள் சென்றபோது மீண்டும் அதே பகுதியைச் சேர்ந்த சுமார் 20-க்கும் மேற்பட்டோர் சோகனூரைச் சேர்ந்த அர்சுனன்,சூர்யா, மதன் மற்றும் சௌந்தர் ஆகிய நால்வரையும் கத்தி, இரும்புக் கம்பி பாறாங்கல் ஆகியவற்றால் கொலை வெறித்தனமாக தாக்கியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த சோகனூர் மக்கள் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் சிகிச்சை பலனின்றி அர்சுனன் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த அரக்கோணம் தாலுக்கா போலீசார் வழக்குபதிந்து கொலைக் குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர். மேலும் இச்சம்பவத்தால் அரக்கோணம் முழுவதும் பெரும்பரபரப்பை ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பளர் சிவகுமார் சம்பவ இடத்தை பார்வையிட்டார்.  மேலும் சோகனூர் மக்கள் இரவு முழுவதும்  சாலைமறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.  எனவே அப்பகுதியில் பதற்றத்தை தணிக்க 100க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com