பெண் அதிகாரிக்கு பாலியல் வன்கொடுமை: விமானப்படை அதிகாரிக்கு செப்.30 வரை நீதிமன்றக் காவல்

பெண் அதிகாரிக்கு பாலியல் வன்கொடுமை: விமானப்படை அதிகாரிக்கு செப்.30 வரை நீதிமன்றக் காவல்

பெண் அதிகாரிக்கு பாலியல் வன்கொடுமை: விமானப்படை அதிகாரிக்கு செப்.30 வரை நீதிமன்றக் காவல்
Published on
கோவையில் பெண் அதிகாரியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் விமானப்படை அதிகாரிக்கு செப்டம்பர் 30 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
கோவை பந்தய சாலையில் உள்ள விமானப்படை பயிற்சி மையத்தில் கடந்த 10ஆம் தேதி சக அதிகாரியான அமிதேஷ் என்பவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் அதிகாரி ஒருவர் விமானப்படை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இதில் நடவடிக்கை எடுக்க தாமதமானதாக கூறப்படும் நிலையில், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி கோவை காவல் துறையிடம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காந்திபுரம் அனைத்து மகளிர் போலீசார், விமானப்படை அதிகாரி அமிதேஷை கைது செய்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக கோவையில் உள்ள குடும்ப வன்முறை தடுப்பு நீதிமன்றத்தில் அமிதேஷ் மற்றும் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி இருவரும் ஆஜராகினர். இதையடுத்து அமிதேஷின் நீதிமன்றக் காவலை செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக அமிதேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விமானப்படை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அதிகாரம் இல்லை என்று வாதிட்டார். எனினும் அமிதேஷ் 2 நாள் மட்டும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில்தான் அமிதேஷ்க்கு செப்டம்பர் 30 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com