ஆம்பூர்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை – தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது

ஆம்பூர்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை – தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது
ஆம்பூர்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை – தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது

ஆம்பூர் அருகே 5-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி தலைமையாசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாச்சம்பட்டு பகுதியில் இயங்கிவரும் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் 5ஆம் வகுப்பு பயிலும் மாணவியிடம் பள்ளி தலைமையாசிரியர் பால்வண்ணன் என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டதாக மாணவியின் தந்தை உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் உமராபாத் காவல் துறையினர் பள்ளி தலைமையாசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் இதே போன்று ஏற்கெனவே பேர்ணாம்பட்டு அருகே பணிபுரிந்தபோது பள்ளியில் மாணவிகளிடம் சிலிமிஷம் செய்தது குறிப்பிடத்தக்கது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com