கே.சி.வீரமணி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்தும் வேலூர் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

கே.சி.வீரமணி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்தும் வேலூர் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

கே.சி.வீரமணி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்தும் வேலூர் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு
Published on

கே.சி.வீரமணி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டவை அனைத்தும் வேலூர் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதிமுக முன்னாள் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், பங்குதாரர்களாக உள்ள நிறுவனங்கள் பெயரில் அமைச்சர் பணி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 15 ஆம் தேதி வேலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் வழக்கு பதிவு செய்தனர். அதை தொடர்ந்து, கடந்த 16 ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜோலார்பேட்டை இல் உள்ள வீரமணி வீடு, அவரது உறவினர்கள் , பெங்களூரு, சென்னை உள்ளிட்ட 35 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

அந்தச் சோதனையில் 623 (சுமார் 5 கிலோ) சவரன் தங்க நகைகள், 47 கிராம் வைர நகைகள், 34 லட்சம் ரொக்கப்பணம், 7 கிலோ வெள்ளி, 1 லட்சத்தி 80 ஆயிரம் அந்நிய செலாவணி டாலர், செல்போன், லேப்டான், ஹாட்டிஸ்க் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கையில் தெரிவித்திருந்தது. அதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்தநிலையில், இன்று கே.சி.வீரமணியின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகை, முக்கிய ஆவணங்கள், ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் பென்டிரைவ் போன்றவற்றை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com