\
“என்னைப்பார்த்து போதையில் இருக்கியா என்கிறார்”- சப்-இன்ஸ்பெக்டருடன் வாக்குவாதம் செய்த நபர்

“என்னைப்பார்த்து போதையில் இருக்கியா என்கிறார்”- சப்-இன்ஸ்பெக்டருடன் வாக்குவாதம் செய்த நபர்

“என்னைப்பார்த்து போதையில் இருக்கியா என்கிறார்”- சப்-இன்ஸ்பெக்டருடன் வாக்குவாதம் செய்த நபர்
Published on

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மது போதையில் இருந்த நபர் காவல் உதவி ஆய்வாளருடன் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராசிபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளராக இருப்பவர் மாணிக்கம். இவர், ஒரு வழக்கு தொடர்பாக அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது, சாரதிராம் என்பவர் மது போதையில் அங்கு நடமாடியுள்ளார்.

அவரை மருத்துவமனையிலிருந்து வெளியேறுமாறு உதவி ஆய்வாளர் மாணிக்கம் கூறியுள்ளார். இதில் ஆத்திரமுற்ற சாரதிராம், காவல் உதவி ஆய்வாளர் மாணிக்கத்துடன் வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் கைகலப்பிலும் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, மது போதையில் இருந்த சாரதிராம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல் உதவி ஆய்வாளர் மாணிக்கம், சாரதிராம் உறவினர்களிடம் கூறுகையில், “என் கையை இறுக்கி பிடித்துக்கொண்டு விடவில்லை. என்னை போதையில் இருக்காயா? எவ்வளவு போதையில் இருக்கிறாய் என்று கேட்கிறார். மருத்துவர் வந்து பரிசோதனை செய்யட்டும். யார் போதையில் இருக்கிறார்கள் என்று அப்போது தெரியும். நான் அவருக்கு அறிவுரைதான் கூறுகிறேன்” என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com