அடையாறு: குப்பைத் தொட்டி அருகே கிடந்த மண்டை ஓடு, கை கால் எலும்புக் கூடுகள்; போலீஸ் விசாரணை

அடையாறு: குப்பைத் தொட்டி அருகே கிடந்த மண்டை ஓடு, கை கால் எலும்புக் கூடுகள்; போலீஸ் விசாரணை
அடையாறு: குப்பைத் தொட்டி அருகே கிடந்த மண்டை ஓடு, கை கால் எலும்புக் கூடுகள்; போலீஸ் விசாரணை

சென்னை அடையாறு அருகே குப்பைத் தொட்டி அருகில் மண்டை ஓடு, எலும்புக் கூடு ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர்.



சென்னை சாஸ்திரி நகர் மெயின் ரோடு, 6-வது குறுக்கு தெருவில் உள்ள குப்பைத் தொட்டி அருகில் பிளாஸ்டிக் கவரில் மனித மண்டை ஓடு, கை மற்றும் காலின் எலும்புகள் இருப்பதை கண்டுள்ளார் தூய்மை பணியாளர்களின் சூப்பர்வைசர். உடனடியாக சாஸ்திரி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார் அவர். தகவலின் பேரில் சாஸ்திரி நகர் போலீசார் எலும்புக் கூடுகளை கைப்பற்றி 174 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.


ஆய்விற்கு பிறகு கைப்பற்றப்பட்ட எலும்புக்கூடு குறித்த விவரங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். மேலும் குப்பை தொட்டியில் எலும்பு கூடுகளை வீசிச் சென்ற நபர் யார் என்பதை அறிய சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com