நில மோசடி புகார் அளித்த சூரிக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன்

நில மோசடி புகார் அளித்த சூரிக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன்
நில மோசடி புகார் அளித்த சூரிக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன்

நிலம் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக புகார் அளித்த நடிகர் சூரிக்கு மத்திய குற்றப்பிரிவு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

முன்னதாக நிலம் வாங்கித் தருவதாக ரூ. 2.70 கோடியை மோசடி செய்ததாக நடிகர் சூரி புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையான ரமேஷ் குடவாலா மற்றும் அன்புவேல் ராஜன் ஆகிய இரண்டுபேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

சூரியின் இந்த புகார் உண்மையில்லை என்று நடிகர் விஷ்ணு விஷால் முன்னதாக டிவிட்டரில் விளக்கம் அளித்திருந்தார். சூரிதான் முன்பணமாக வாங்கிய பணத்தை திருப்பித் தரவேண்டும் எனவும் அந்த அறிக்கையில் விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில், நடிகர் சூரிக்கு மத்திய குற்றப்பிரிவு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதில் வருகிற 29ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com