சொத்து பிரச்னையில் தம்பதி மீது உறவினர்கள் ஆசிட் வீச்சு

சொத்து பிரச்னையில் தம்பதி மீது உறவினர்கள் ஆசிட் வீச்சு

சொத்து பிரச்னையில் தம்பதி மீது உறவினர்கள் ஆசிட் வீச்சு
Published on

சொத்து பிரச்னையில் உறவினர்களே தம்பதி மீது ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி அமுதா. பழனியப்பன் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக வெளிநாட்டில் வசித்து வந்த நிலையில், தனது அண்ணன் கருப்பையா வசம் பணம் அனுப்பி சில சொத்துகளை காரைக்குடியில் வாங்கியுள்ளார். தற்போது வெளிநாட்டில் இருந்து திரும்பிய பழனியப்பனுக்கும், அவரது அண்ணன் மனைவி ஆனந்திக்கும் சொத்து பிரச்சனை காரணமாக விரோதம் எழுந்துள்ளது. இதனிடையே அந்த முன்விரோதம் சண்டையாக மாறியதால், அண்ணன் மனைவி ஆனந்தி மற்றும் அவரது மகன்கள் இருவரும் சேர்ந்து பழனியப்பன் தம்பதியினர் மீது ஆசிட்டை வீசியுள்ளனர். ஆசிட் முகத்தில் பட்டதில் படுகாயமடைந்த தம்பதியினர், காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com