காதலிக்க மறுத்த சிறுமியை பீர் பாட்டிலால் தாக்கிய இளைஞர்... மடக்கிப்பிடித்த பொதுமக்கள்!

காதலிக்க மறுத்த சிறுமியை பீர் பாட்டிலால் தாக்கிய இளைஞர்... மடக்கிப்பிடித்த பொதுமக்கள்!
காதலிக்க மறுத்த சிறுமியை பீர் பாட்டிலால் தாக்கிய இளைஞர்... மடக்கிப்பிடித்த பொதுமக்கள்!

காதலிக்க மறுத்த 16 வயது சிறுமியை பீர் பாட்டிலால் தாக்கிய் இளைஞர் கைது செய்யப்பட்டார்.

சென்னையை சேர்ந்த 16 வயது மாணவியொருவர், செல்போனில் ஒருமுறை நம்பர் மாறுதலாகி வேறொருவருக்கு அழைத்திருக்கிறார். அப்போது எதிர்முனையில் கருவேப்பிலை பாளையம் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் (23) என்ற இளைஞர் அவருடன் பேசியுள்ளார். இதன்பின் இருவரும் செல்போனில் தொடர்ந்து பேசி வந்ததாக சொல்லப்படுகிறது. கடந்த ஆறு மாதங்களாக வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றில் இருவரும் தகவலை பரிமாறி வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஐயப்பன், திடீரென அந்த மாணவியை காதலிப்பதாகவும் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் அவரிடம் வற்புறுத்தியுள்ளார். இதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவிக்கவே கோபமடைந்த இளைஞர், நேற்று காலை பீர் பாட்டிலை மறைத்து வைத்து சென்னையிலுள்ள ஒரு லோக்கல் ரயில் நிலையத்தில் வைத்து, மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு மாணவி மறுப்பு தெரிவிக்கவே இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ஐயப்பன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலை உடைத்து மாணவியை கழுத்தில் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த் மாணவி நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதை பார்த்த பொது மக்கள் அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து அருகிலிருந்த அம்பத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்த மாணவி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து நேற்று மாலை காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

அதைத் தொடர்ந்து புகாரின் பேரில் ஐயப்பனை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை செய்தனர். அதில் அவர், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் கல்லூரி கேண்டினில் பணிபுரிவதாகவும், காதல் மற்றும் திருமணத்துக்கு தொடர்ந்து மாணவி மறுக்கவே கோவத்தில் பீர் பாட்டிலால் வெட்டியதாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com