14 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை: போக்சோவில் வாலிபர் கைது

14 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை: போக்சோவில் வாலிபர் கைது
14 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை: போக்சோவில் வாலிபர் கைது
இடுக்கியில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ராஜபாளையத்தை சேர்ந்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைதாகியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த மனோஜ்குமார், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள உறவினர் தோட்டத்தில் தங்கி வேலை பார்த்துள்ளார். அப்போது அருகில் வசிக்கும் 14 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியை காணாததால் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில், சிறுமியை மூணாறில் இறக்கிவிட்டு, மனோஜ்குமார் தலைமறைவானார். இதையடுத்து சொந்த ஊரான ராஜபாளையத்தில் மனோஜ்குமார் இருப்பதை அறிந்த காவல்துறையினர் அவரை கைது செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com