தந்தையின் சீருடை அணிந்து ராணுவ பயிற்சி மையத்தில் புகுந்த இளைஞர்

தந்தையின் சீருடை அணிந்து ராணுவ பயிற்சி மையத்தில் புகுந்த இளைஞர்
தந்தையின் சீருடை அணிந்து ராணுவ பயிற்சி மையத்தில் புகுந்த இளைஞர்

சென்னை ஆலந்தூரில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் அத்துமீறி நுழைந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். 

சுற்றியும் பாதுகாப்புடன் இயங்கி வரும் ஆலந்தூரில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் நிஷாந்த் என்ற நுழைந்துள்ளார். அதன் பின்பு அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் என்பதும், ராணுவ பயிற்சி மையத்தை சுற்றி பார்ப்பதற்காக தந்தையின் சீருடை மற்றும் அடையாள அட்டையை கொண்டு உள்ளே சென்றதும் தெரியவந்தது. 

பொய்யான தகவல் தெரிவித்து அத்துமீறி, ராணுவ மையத்திற்கு சென்றதால் நிஷாந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆலந்தூர் நீதிபதி உத்தரவை அடுத்து அவர் 10 நாள் சிறையில் அடைக்கப்பட்டார். பொய்யான தகவலைக் கொண்டு இளைஞர் உள்ளே நுழைந்த சம்பவம் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com