தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஆட்கொண்டார் குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மருதையா என்பவருக்கும் கடந்த ஐந்து வருடங்களாக நிலத் தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலை தங்கராசு நிலத்திற்கு வந்த மருதையாவை என்னுடைய இடத்துக்கு நீங்கள் வரக்கூடாது என வாக்குவாதம் செய்துள்ளார். இந்த வாக்குவாதம் முற்றி மருதையா, தான் கொண்டு வந்திருந்த அரிவாளால் தங்கராசுவை வெட்டியுள்ளார்.