தனியாக சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு !

தனியாக சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு !
தனியாக சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு !

ஓசூரில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் 5 சவரன் நகை மற்றும் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அந்திவடி பகுதியைச் சேர்ந்தவர்கள் சுரேஷ் -சித்ரா தம்பதியினர். சுரேஷ் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பணி செய்து வருகிறார். இவர்களுக்கு நேற்று திருமண நாள் என்பதால் தங்களின் இரு மகள்களுடன் ஓசூர் தாலுகா அலுவலகம் சாலையில் உள்ள திரையரங்கிற்கு சென்று திரைப்படம் பார்த்து நள்ளிரவில் வீடு திரும்பியுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் நான்கு பேர் செல்ல முடியாத காரணத்தால் தங்கள் கணவன் சுரேஷிடம் குழந்தைகளை அழைத்து வீட்டில் விட்டு வாருங்கள், பிறகு என்னை அழைத்துச் செல்லுங்கள் என சித்ரா கூறியுள்ளார்.

இதனையடுத்து சுரேஷ் தனது மகள்களை வீட்டில் விட சென்றார். அப்போது தன் கணவன் திரும்பி வரும் வழியான ஓசூர் அரசு மருத்துவமனை செல்லும் சாலையில் சித்ரா தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த சித்ரா கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலி மற்றும்  தாலியை பறித்து கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தின் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஓசூர் துணை காவல் கண்கணிப்பளர் மீனாட்சி மற்றும் ஓசூர் நகர போலீசார் வழிப்பறி நடந்த இடத்தை பார்வையிட்டு அப்பகுதியில் உள்ள கண்கணிப்பு கேமராக்களில் மர்மநபர்கள் சென்ற காட்சிகள் பதிவாகி உள்ளனவா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பிரதான சாலையில் நடந்துள்ள இந்த வழிப்பறி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் உள்ள மின் கம்பங்களில் பழுதான மின் விளக்குகள் சரி செய்யாமல் இருப்பதும், ஓசூர் நகர போலீசார் ரோந்து செல்வது முற்றிலும் தவிர்த்து விட்டுள்ளதால் தன் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதற்குகாரணம் என பொதுமக்கள் தரப்பில் குற்றஞ்சாட்டபடுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com