சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதிய பேருந்து நிலையம் செல்லும் 100 அடி சாலையில் 100 க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை ஒரு நிதி நிறுவன கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த 8000 ரூபாய் பணத்தை திருடியுள்ளனர். பின்பு, அதே கடையின் மாடியின் வழியாக சென்று துணிக்கடையில் 16000 ரூபாயும், மருந்து பொருட்கள் விற்பனை கடையில் 32 ஆயிரம் ரூபாயையும் திருடிவிட்டு தப்பினர்.