காரைக்குடி பேருந்து நிலையத்தில் அடுத்தடுத்து 3 கடைசிகளில் திருட்டு - பொதுமக்கள் அதிர்ச்சி

காரைக்குடி பேருந்து நிலையத்தில் அடுத்தடுத்து 3 கடைசிகளில் திருட்டு - பொதுமக்கள் அதிர்ச்சி
காரைக்குடி பேருந்து நிலையத்தில் அடுத்தடுத்து 3 கடைசிகளில் திருட்டு - பொதுமக்கள் அதிர்ச்சி
காரைக்குடி புதிய பேருந்து நிலையம் செல்லும் 100 அடி சாலையில் துணிக்கடை உட்பட அடுத்தடுத்து மூன்று கடைகளில் பணம் திருட்டு நடைபெற்ற சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதிய பேருந்து நிலையம் செல்லும் 100 அடி சாலையில் 100 க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை ஒரு நிதி நிறுவன கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த 8000 ரூபாய் பணத்தை திருடியுள்ளனர். பின்பு, அதே கடையின் மாடியின் வழியாக சென்று துணிக்கடையில் 16000 ரூபாயும், மருந்து பொருட்கள் விற்பனை கடையில் 32 ஆயிரம் ரூபாயையும் திருடிவிட்டு தப்பினர்.
.
திருட்டு குறித்து கடையின் உரிமையாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் திருட்டில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்களை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com