சென்னை: நீதிபதி முன்பு கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற கைதி

சென்னை: நீதிபதி முன்பு கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற கைதி
சென்னை: நீதிபதி முன்பு கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற கைதி

சிறைத்துறை அதிகாரிகள் கொடுமைப்படுத்துவதாக கூறி நீதிபதி முன்பு ஆயுள் தண்டனை கைதி பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வியாசர்பாடியைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் விசாரணைக்காக உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூடுதல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணையின் போது மறைத்து வைத்திருந்த பிளேடால் திடீரென கழுத்தை அறுத்துக்கொண்ட நிலையில், உடனே அவரை காவல்துறையினர் தடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவருக்கு கழுத்தில் 14 தையல்கள் போடப்பட்டதாக கூறப்படுகிறது.

சிறையில் செய்யும் பணிக்காக பாண்டியனுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் பாதியை அதிகாரி பறித்துக்கொள்வதாகவும் அது தொடர்பாக புகார் அளித்ததால் சிறைத்துறையினர் தாக்கி கொடுமைப்படுத்துவதாகவும் கூறி நீதிபதி முன்பு தற்கொலைக்கு முயன்றதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com