வீட்டில் வைத்து கருக்கலைப்பு முயற்சி : கர்ப்பிணி மரணம்

வீட்டில் வைத்து கருக்கலைப்பு முயற்சி : கர்ப்பிணி மரணம்
வீட்டில் வைத்து கருக்கலைப்பு முயற்சி : கர்ப்பிணி மரணம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வீட்டில் வைத்து கருக்கலைப்பு செய்யும் போது 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த விபரீதம் நடந்துள்ளது. அடுத்தடுத்து 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், 4 ஆவது பெண் குழந்தையாகிவிடுமோ என்ற அச்சத்தில் இந்த விபரீதம் அரங்கேறியுள்ளது.

உசிலம்பட்டி அருகே உத்தப்புரம் கிராமத்தைச் சேர்ந்த ராமன் - ராமுத்தாய் தம்பதியினர். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளன. தாயான ராமுத்தாய், 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் 4 ஆவதாக பிறப்பதும் பெண் குழந்தையாகிவிடுமோ என்ற அச்சம் இருந்துவந்தது.

இதனால், கருவை கலைக்க எண்ணிய அவர், உசிலம்பட்டி தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த லட்சுமி என்ற செவிலியை அணுகியுள்ளார். இதையடுத்து தொட்டப்பநாயக்கணூர் கிராமத்தில் உள்ள செவிலியரின் வீட்டில் வைத்து கருவை கலைப்பதற்கான சிகிச்சை மேற்கொள்ளும் போது ராமுத்தாய்க்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்த கிராமத்தினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததன் அடிப்படையில் வந்த உசிலம்பட்டி காவல்துறையினர், உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தனியார் மருத்துவமனை செவிலியர் லட்சுமியையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com