இதுதொடர்பாக சிந்துபட்டி காவல் நிலையத்தில் மாணவியின் தந்தை முனியாண்டி அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் செல்வத்தை கைது செய்தனர். ஆனால் இந்த வழக்கில் ஜாமினில் வெளிவந்த செல்வம், தனது மகள்களை தினசரி மிரட்டுவதாகவும், பள்ளிக்கு செல்லும் சமயங்களில் செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் பின்தொடர்ந்து அச்சுறுத்தல் தருவதாகவும், இதனால் மகள்கள் பள்ளிக்கு செல்ல அச்சமடைந்து வீட்டிற்குள்ளயே முடங்கியிருப்பதாகவும் தெரிவித்து பள்ளி மாணவியர்களின் பெற்றோர் மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்களது குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்க கோரி மனு அளித்தனர்.