மதுரை: விசாரணைக்கு சென்ற பெண் காவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

மதுரை: விசாரணைக்கு சென்ற பெண் காவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது
மதுரை: விசாரணைக்கு சென்ற பெண் காவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது
மதுரையில் விசாரணைக்கு சென்ற பெண் காவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.
செல்லூர் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவர் மீது அவரின் மனைவி புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக அனைத்து மகளிர் காவல்நிலைய பெண் காவலர்கள் சங்கீதா மற்றும் பொன்னுத்தாயி ஆகியோர், பெருமாளை விசாரிப்பதற்காக அவரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது இருவரையும் அவதூறாக பேசிய பெருமாள், அரிவாள்மனையை காண்பித்து கொலை மிரட்டல் விடுத்த காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்த புகாரில் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெருமாளை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com