குளிர்பானம் வாங்க பேக்கரிக்குச் சென்ற சிறுமிக்கு பாலியல் சீண்டல் - கடை ஊழியர் கைது

குளிர்பானம் வாங்க பேக்கரிக்குச் சென்ற சிறுமிக்கு பாலியல் சீண்டல் - கடை ஊழியர் கைது
குளிர்பானம் வாங்க பேக்கரிக்குச் சென்ற சிறுமிக்கு பாலியல் சீண்டல் - கடை ஊழியர் கைது

முகப்பேரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேக்கரி ஊழியர் கைது செய்யப்பட்டார்.

முகப்பேர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தபோது அதே பகுதியில் இருந்த பேக்கரிக்கு சென்று குளிர்பானம் வாங்கும்போது அங்கிருந்த நபர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தார். இதுகுறித்து அவரது பெற்றோர் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அந்த நபரிடம் விசாரணை செய்தபோது அந்த நபர் தவறு ஏதும் செய்யவில்லை எனத் தெரிவித்தார்.

கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது சிறுமிக்கு அந்த நபர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரகு (32), என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். இவர் அதே பேக்கரியில் தங்கி வேலைசெய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை கொன்ற பாஜக தலைவர் மகன்: உத்தராகாண்டில் பகீர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com