“வாய்பேச முடியாத இளம் பெண்ணை இரும்பு கம்பியால் அடித்து கொன்றார்” - விசாரணையில் தகவல்

“வாய்பேச முடியாத இளம் பெண்ணை இரும்பு கம்பியால் அடித்து கொன்றார்” - விசாரணையில் தகவல்
“வாய்பேச முடியாத இளம் பெண்ணை இரும்பு கம்பியால் அடித்து கொன்றார்” -  விசாரணையில் தகவல்

சிவகங்கையில் 17 வயது இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா, கீழசேவல் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமம் அச்சரம்பட்டி. இக்கிராமத்தில் வசித்து வந்த 17 வயது இளம் பெண் கடந்த ஜூலை 10ம் தேதி மாணிக்கம் என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

எப்படி நடந்தது சம்பவம்

அச்சரம்பட்டி கிராமத்தில் வசித்து வருகிற அழகு என்பவரின் 17 வயதான மகளுக்கு வாய் பேச முடியாது. எட்டாம் வகுப்பு வரை இந்த பெண் படித்திருக்கிறார். கடந்த ஜூலை 10ம் தேதி காலை சுமார் 9.30 மணியளவில் தோப்பு வீட்டில் தனியாக இருந்துள்ளார். தனியாக இருந்த அந்தப் பெண்ணிடம் மாணிக்கம் என்கிற 27 வயது இளைஞர் அத்துமீறி பாலியல் வன்புணர்ச்சி செய்திருக்கிறார்.  அப்போது, அந்த பெண் எதிர்ப்பு தெரிவிக்க கழுத்தை நெறித்து இரும்பு கம்பியால் தலையில் பலமாக தாக்கியிருக்கிறார். பலத்த காயமடைந்த அந்த பெண்ணை இழுத்துச் சென்று ஒரு புதருக்குள் வீசியிருக்கிறார். 

காலை சுமார் 9.45 மணியளவில் கல்யாணி என்கிற பெண் அந்த புதருக்கு அருகில் சென்ற போது முனகல் சத்தம் கேட்டிருக்கிறது. அதிர்ச்சியில் புதருக்குள் சென்று பார்க்கும் போது அரைநிர்வாணத்தில் மயக்க நிலையில் அந்த பெண் கிடந்துள்ளார். இதுகுறித்து கீழசேவல் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு வழக்கு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. 

போலீசார் விசாரணை

இதனிடையே, சம்பவம் நடந்த இடத்தினை ராமநாதபுரம் டிஐஜி காமினி, எஸ்பி ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் பார்வையிட்டு விசாரணை செய்திருக்கின்றனர்.  குற்றவாளியான மாணிக்கத்திடம் போலீசார் விசாரணை செய்து நேற்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக எஸ்.பி. ஜெயசந்திரன் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், “சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் அப்பகுதியில் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அந்த ஊரைச் சேர்ந்த பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் குறிப்பிட்ட அந்த நேரத்தில் அந்தப் பகுதியில் யாரெல்லாம் நடமாடினார்கள் என்பது குறித்து போலீசார் கேட்டறிந்தனர். அதன் அடிப்படையில் சிலரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மாணிக்கம் தான் குற்றவாளி என்பது தெரியவந்தது. பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு சில வீடுகள் தள்ளி தான், குற்றவாளி மாணிக்கம் வீடு இருந்தது” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com