சென்னை: ரூ.10 கோடிக்கு போலி காசோலை கொடுத்து மோசடி முயற்சி - 9 பேர் கைது

சென்னை: ரூ.10 கோடிக்கு போலி காசோலை கொடுத்து மோசடி முயற்சி - 9 பேர் கைது
சென்னை: ரூ.10 கோடிக்கு போலி காசோலை கொடுத்து மோசடி முயற்சி - 9 பேர் கைது

சென்னையில் வங்கியில் போலியான காசோலை கொடுத்து 10 கோடி ரூபாய் மோசடி செய்ய முயன்ற 2 பெண்கள் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு வந்த இருவர் 10 கோடி ரூபாய்க்கான காசோலை ஒன்றை கொடுத்தனர். இந்த காசோலையை சரிபார்த்த வங்கி ஊழியருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் உடனே வங்கியின் மேலாளரிடம் தகவல் அளித்தார்.

காசோலையை கொண்டு வந்த மூவரிடம் வங்கி மேலாளர் விசாரணை நடத்தியதில் அது போலியானது எனத் தெரிய வந்தது. வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில் காசோலையை கொடுத்த மூவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான 9 பேர் மீதும் 8 பிரிவுகளின்கீழ் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com