பூட்டை உடைத்து 73 சவரன் தங்க நகைகள் கொள்ளை

பூட்டை உடைத்து 73 சவரன் தங்க நகைகள் கொள்ளை

பூட்டை உடைத்து 73 சவரன் தங்க நகைகள் கொள்ளை
Published on

திருப்பூர் அருகே தொழிலதிபர் வீட்டில் 73 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

திருப்பூர் சோளிபாளையம் பகுதியில் வசித்து வரும் ராஜேஷ்கண்ணன் என்பவர் நேற்று முன் தினம் குடும்பத்துடன் கேரளா சென்றிருக்கிறார். இந்நிலையில், நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற முகமூடி கொள்ளையர்கள் இரண்டு பேர் பீரோவிலிருந்த நகைகள் மற்றும் ரொக்கப்பணத்தை திருடிச் சென்றிருக்கின்றனர். அருகிலிருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். கொள்ளை சம்பவம் பற்றி ராஜேஷ்கண்ணனுக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, வீடு திரும்பிய அவர், 73 சவரன் நகைகள் கொள்ளைபோயிருப்பதாகத் தெரிவித்தார்.

இதேபோல, சென்னை அம்பத்தூர் அருகே அடுத்தடுத்து மூன்று வீடுகளில் 45 சவரன் தங்க நகைகளும், 50,000 ரூபாயும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பட்டரைவாக்கம் ரயில் நிலையம் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் மூன்று குடும்பத்தினர், திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலுக்குச் சென்றிருந்த தருணத்தில் கொள்ளை நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com