சிறுமிக்கு பாலியல் தொல்லை: தாத்தா கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தாத்தா கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தாத்தா கைது
Published on

விருதுநகரில் 7 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த 65 வயது முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் பர்மா காலனியை சேர்ந்த 7 வயது சிறுமி தெருவில் விளையாடும்போது அதே பகுதியை சேர்ந்த 65 வயது முதியவர் வெள்ளைப்பாண்டி தனது வீட்டிற்கு அழைத்து சென்று தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார். 

இந்நிலையில், இதுகுறித்து தனது பெற்றோரிடம் சிறுமி தெரிவித்ததைத் தொடர்ந்து, விருதுநகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைப் பெற்ற காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் முதியவர் வெள்ளைபாண்டி தெருவில் விளையாடும் ஏரளாமான சிறுமிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com