திருமங்கலத்தில் 60வயது மதிக்கத்தக்க பெண் எரித்துக் கொலை-பட்டப்பகலில் பயங்கரம்

திருமங்கலத்தில் 60வயது மதிக்கத்தக்க பெண் எரித்துக் கொலை-பட்டப்பகலில் பயங்கரம்
திருமங்கலத்தில்  60வயது மதிக்கத்தக்க பெண் எரித்துக் கொலை-பட்டப்பகலில் பயங்கரம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் குண்டாற்றுப் பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க பெண் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றதால் பொது மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் பி டி ராஜன் தெரு அருகில் குண்டாறு நதி செல்கிறது. இப்பகுதியில் இருந்து இன்று மதியம் துர்நாற்றம் கலந்த புகை குடியிருப்புப் பகுதிகள் வந்தது, இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் ஆற்றுப்பகுதியில் சென்று பார்த்தபோது தீ எரிந்த நிலையில் உடல் ஒன்று கிடப்பதை கண்டு அதிர்ச்சியுற்றனர்.இதனைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த போலீசார் உடல் எரிந்து கொண்டிருப்பதை கண்டு தண்ணீரை ஊற்றி அணைத்தனர் தொடர்ந்து எரிந்த உடலை ஆய்வு செய்தபோது  பதினெட்டு வயது மதிக்கத்தக்க இளம்பெண் என்ற கோணத்தில் திருமங்கலம் டிஎஸ்பி வினோதினி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது 70 சதவீதம் எரிந்த நிலையிலும் இறந்த பெண்ணின் வலது கை உடைந்த நிலையில் காணப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு உடலை ஆய்வு செய்ததில் இறந்த பெண் 60 வயது மதிக்கத்தக்கவர் என்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் அறுபது வயது மதிக்கத்தக்க பெண் எதற்காக எரித்துக் கொல்லப்பட்டார் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com