இருவர் கைது
இருவர் கைதுpt desk

பெங்களூரு TO சென்னை | அதிவேகமாக வந்த சொகுசு கார்.. சோதனையிட்ட போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

சென்னை நோக்கி அதிவேகமாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி - 500 கிலோ எடை கொண்ட குட்காவை பறிமுதல் செய்த போலீசார் இருவரை கைது செய்தனர்.
Published on

செய்தியாளர்: நாராயணசாமி

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை சுங்கச் சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்னையை நோக்கி அதிவேகமாக சொகுசு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார், காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் 500 கிலோ எடையுள்ள குட்கா இருப்பது தெரியவந்தது.

இருவர் கைது
சென்னை | பூட்டியிருந்த வீட்டில் 20 சவரன் நகை திருடு போன வழக்கு - 5 பெண்கள் கைது

இதுகுறித்து காரில் வந்தவர்களிடம் விசாரித்த போது, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கல்யாணராமன் (27), கானாராமன் (29) என்பதும், இவர்கள் பெங்களூருவில் தங்கி சென்னைக்கு குட்கா கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து உடனடியாக 500 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com