மாஸ்க் இல்லை.. இடைவெளி இல்லை.. பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்

மாஸ்க் இல்லை.. இடைவெளி இல்லை.. பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்
மாஸ்க் இல்லை.. இடைவெளி இல்லை.. பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்

பட்டா கத்தியுடன்கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 5 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக நண்பர்கள் சுந்தரமூர்த்தி, பாண்டியன், தமிழ், அழகன், கணபதி ஆகியோர் வீரபாண்டி கிராமம் ராஜபாளையம் தெருவில் ஒன்று கூடி இருக்கிறார்கள்.

நண்பர்கள் ஒன்றிணைந்து மணிகண்டனுக்கு கேக் வெட்ட ஏற்பாடு செய்திருக்கிறார்கள். வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக விபரீத திட்டம் தீட்டிய நண்பர்கள் மணிகண்டனை பட்டா கத்தியால் கேக் வெட்ட சொல்லி கொண்டாடியுள்ளனர். இந்த நிகழ்வினை போட்டோ ம்ற்றும் வீடியோ எடுத்து வாட்ஸ்அப் மூலம் அந்த பகுதியில் வைரல் ஆக்கி உள்ளனர்.

இதனை காணொளி மூலம் கண்ட அரகண்டநல்லூர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சம்பந்தப்பட்ட ஐந்து பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். கொரோனா நோய் தொற்றால் மக்கள் அச்சத்தில் வீட்டிற்குள் தனித்திருத்தலை கடைபிடித்து வரும் நிலையில், இளைஞர்கள் எவ்வித அச்சமும் கொள்ளாமல் இத்தகைய சேட்டையில் ஈடுபட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்கள் மாஸ்க் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் பிறந்தநாள் கொண்டியுள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com