ரயிலில் கடத்திவரப்பட்ட 40 கிலோ கஞ்சா சாக்லெட்டுகள் பறிமுதல் - ஒடிசா இளைஞர் கைது

ரயிலில் கடத்திவரப்பட்ட 40 கிலோ கஞ்சா சாக்லெட்டுகள் பறிமுதல் - ஒடிசா இளைஞர் கைது

ரயிலில் கடத்திவரப்பட்ட 40 கிலோ கஞ்சா சாக்லெட்டுகள் பறிமுதல் - ஒடிசா இளைஞர் கைது
Published on

காட்பாடி வழியாக ரயிலில் கடத்திச் செல்லப்பட்ட 40 கிலோ கஞ்சா சாக்லெட், 175 கிலோ குட்காவை பறிமுதல் செய்த இருப்புபாதை போலீசார், ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தமிழகத்திற்குள் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை முற்றிலும் தடுக்கும் வகையில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள ரயில்வே சந்திப்பின் வழியாக செல்லும் அனைத்து ரயில்களிலும் தொடர் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஒடிசா மாநிலம் பத்ராவில் இருந்து கர்நாடக மாநிலம் முசு புரம் வரை செல்லும் ஹவ்ரா பயணிகள் விரைவு ரயிலில், காட்பாடி ரயில் நிலைய தமிழக இருப்பு பாதை காவலர்கள் திடீர் சோதனை மேற்கொண்டதில் அப்போது ஒரு பெட்டியில் சந்தேகத்திற்கிடமாக இருந்த 2 மூட்டை மற்றும் 4 பெரிய பைகளை சோதனை செய்தனர்.

அப்போது அதில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போன்ற போதை பொருட்கள் மற்றும் சாதாரண சாக்லெட் போன்று பேக் செய்யப்பட்ட போதையை உண்டாக்கும் கஞ்சா சாக்லெட்டுகள் இருப்பது தெரியவந்து. இதையடுத்து 175 கிலோ குட்கா மற்றும் 40 கிலோ கஞ்சா சாக்லெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சா சாக்லெட்டை கடத்திச் சென்ற ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிஜய்குமார் (28) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com