ம.பி: காவல்நிலையத்துக்குள் குட்காவை துப்பிய 4 போலீசார் கைது

ம.பி: காவல்நிலையத்துக்குள் குட்காவை துப்பிய 4 போலீசார் கைது
ம.பி: காவல்நிலையத்துக்குள் குட்காவை துப்பிய 4 போலீசார் கைது

மத்திய பிரதேசத்தில் காவல்நிலைய வளாகத்துக்குள் குட்காவை துப்பிய போலீசார் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய பிரதேசம் மாநிலம் ஷாஹ்தோல் காவல் நிலைய வளாகத்துக்குள்  போலீசார் 4 பேர் குட்காவை மென்று துப்பிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஷாஹ்தோல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முகேஷ் வைஷ்யா கூறுகையில், எஸ்.ஐ நந்தகுமார் கச்வாஹா, கூடுதல் எஸ்.ஐ தினேஷ் விவேதி, ஏ.எஸ்.ஐ தேவேந்திர சிங் மற்றும் தலைமை காவலர் பியாரே லால் ஆகிய நான்கு பேரும் காவல்நிலைய வளாகத்துக்குள் குட்காவை மென்று துப்பிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். காவல் நிலைய வளாகத்தில் ஒழுக்கமின்மை மற்றும் அசுத்தத்தை பரப்பிய குற்றத்திற்காக அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’’ என கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com