மாடு மேய்த்த சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - 4 பேர் போக்சோவில் கைது

மாடு மேய்த்த சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - 4 பேர் போக்சோவில் கைது
மாடு மேய்த்த சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - 4 பேர் போக்சோவில் கைது

திருவள்ளூரில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக 4 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருவள்ளூரில் 17 வயது சிறுமி ஒருவர் மாடு மேய்க்கச் சென்றபோது அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்கள் பாலியல் தொந்தரவு செய்து வீடியோ எடுத்து மிரட்டியதால் சிறுமி மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்றதாக தமிழர் முன்னேற்ற படையின் நிறுவனர் வீரலட்சுமி திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்தில் புகாரளித்தார்.

இதையடுத்து தீக்காயங்களுடன் சிறுமி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பென்னலூர்பேட்டை காவல் துறையினர், 4 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வீடியோ எடுத்ததோடு தற்கொலைக்கு தூண்டியதாக அஜித் குமார் (25), ஞானமூர்த்தி (20), ராசு (23) மற்றும் அஜித் (26) ஆகிய 4 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மாடு மேயக்கச் சென்ற இடத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com