10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்கள் மருத்துவர்களான கொடுமை... திருப்பத்தூரில் அதிர்ச்சி!

10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்கள் மருத்துவர்களான கொடுமை... திருப்பத்தூரில் அதிர்ச்சி!
10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்கள் மருத்துவர்களான கொடுமை... திருப்பத்தூரில் அதிர்ச்சி!

திருப்பத்தூரில் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு மருத்துவம் பார்த்த 4 போலி மருத்துவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போலி மருத்துவர்கள் அதிகரித்துள்ளதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில், போலி மருத்துவர்களை ஒடுக்கும் பணியில் மாவட்ட காவல் துறையினர் ஈடுபட்டனர். அதன்கீழ் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, திருப்பத்தூரையடுத்த ஆரிப் நகர் பகுதியைச் சேர்ந்த அப்துல்லா மற்றும் அங்கநாதவலசை பகுதியைச் சேர்ந்த வேலாயுதம், சுண்ணாம்புகாளை பகுதியைச் சேர்ந்த உமா சரஸ்வதி மற்றும் செண்ணாம்மாள் ஆகிய 4 பேரும் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு தங்களுடைய பகுதிகளில் ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் பேரில் போலி மருத்துவர்கள் பிடிக்க தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் இதில் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இரண்டு ஆண் போலி மருத்துவர்களையும் குருசிலப்பட்டு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இரண்டு பெண் போலி மருத்துவர்கள் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com