3 கிராமங்களில் 3 வீடுகள்... வீட்டின் பூட்டை உடைத்து 37 பவுன் நகை, 50 ஆயிரம் ரொக்கம் கொள்ளை

3 கிராமங்களில் 3 வீடுகள்... வீட்டின் பூட்டை உடைத்து 37 பவுன் நகை, 50 ஆயிரம் ரொக்கம் கொள்ளை
3 கிராமங்களில் 3 வீடுகள்... வீட்டின் பூட்டை உடைத்து 37 பவுன் நகை, 50 ஆயிரம் ரொக்கம் கொள்ளை

திருச்சியில் அடுத்தடுத்து 3 கிராமங்களில் வீட்டின் பூட்டை உடைத்து 37 பவுன் நகை, 50 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள சனமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்வேலன் என்பவர் வீட்டை பூட்டிவிட்டு வயலுக்கு சென்றுவிட்டு திரும்பிவந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்வையிட்டபோது படுக்கையறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 21 பவுன் தங்க நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் யாரோ கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதே போன்று மதியம் வாழையூர் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்த கொள்ளையர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 6 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் ரொக்க பணத்தை களவாடிச் சென்றனர்.  

தொடர்ந்து மாலை 3 மணியளவில் எதுமலை கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை என்பவர் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பிவந்து பார்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகையை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவத்தால் கிராம பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து வீட்டின் உரிமையாளர்கள் தனித்தனியே சிறுகனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். சிறுகனூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட 3 கிராமங்களில் பட்டபகலில் அடுத்தடுத்து அரங்கேறிய இந்த கொள்ளை சம்பவத்தால் அருகில் உள்ள கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com